திருக்குறள்

1121.

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர்.

திருக்குறள் 1121

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலேயி றூறிய நீர்.

பொருள்:

இனியமொழி பேசுகினற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்து வரும் உமிழ்நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும்.

மு.வரததாசனார் உரை:

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!.